BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Category 1

Category 2

Category 3

Category 4

Sunday, August 3, 2014

ஆண்டாள் நோய்க்குத் தோழி சொன்ன மருந்து

ஆண்டாள் நோய்க்குத் தோழி சொன்ன மருந்து

1. நாராயணா வென்று பாராயணம் செய்யா நாவிருந்தும் வீணே !

2. சராசரங்கள் அறியா மூடர் தழைத்திருந்தும் வீணே !

3. தேஹாபிமானம் விடாதவர்கள் செய்யும் ஜெபதபங்கள் வீணே !

4. போகசுகம் தன்னை நினைத்துச் செய்யும் பக்தி பூஜை யாவும் வீணே !

5. நறுந்துழாய் இல்லாத் திருவாராதனம் பல நாளும் செய்தும் வீணே !

6. விருந்துடன் இருந்து அமுது அருந்தாதவனுரை வீடு வாசலும் வீணே !

7. மணவாளனுடன் தினம் எதிர்த்துப் போராடும் மனைவியிருந்தும் வீணே !

8. குணவான் என மேலார் உரைத்திட நடவாத குமரன் இருந்தும் வீணே !

9. மனு நீதி பிசகிடும் குடிகளை வருத்திடும் மன்னன் இருந்தும் வீணே !

10. காரணவஸ்துவை விட்டுப் பல தெய்வம் தொழுவதும் வீணே !

11. தரணியில் ஹரிப்ரீதி இல்லாதவன் செய்யும் தர்மம் யாவும் வீணே !

12. தரணியில் உலுத்தராய் வீணருக்குழைத்து சரீரம் வளர்ப்பதும் வீணே !

13.பாரினில் ஆழ்வார்கள் அருளிச்செய்யா நூலைப் படிப்பதும் வீணே !

14. நாரியரில் மிக்க நற் செய்கையில் லாதார் அழகாயிருந்தும் வீணே !
 
Copyright © 2013 தெய்வத் தமிழ்
Shared by WpCoderX